×

ஆட்டையாம்பட்டியில் வீரபாண்டி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி வாக்கு சேகரிப்பு

ஆட்டையாம்பட்டி, ஏப்.3: வீரபாண்டி தொகுதியில், அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடும் வேட்பாளர் ராஜமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஆட்டையாம்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி பொதுமக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி. பாஜக கூட்டணியில் இருப்பதால், தமிழ்நாட்டின் நல்ல திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி விரைவில் கிடைக்கும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட, எம்எல்ஏ, எம்பி, முதலமைச்சர் கூட ஆகலாம். சாதாரண தொண்டன் கூட முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம்.  இப்பகுதியில் நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் வசிப்பதால், அவர்களுக்கு தேவையான அனைத்து கடன் தள்ளுபடிகளும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலவாரியம் விரைவில் அமைக்கப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,’ என்றார்.வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ செம்மலை, வீரபாண்டி ஒன்றிய தலைவர்கள் வருதராஜ் மற்றும் வெங்கடேசன், பாமகவை சேர்ந்த சாம்ராஜ், பாஜக மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Edappadi ,Veerapandi ,Attayampatti ,
× RELATED தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க...