×

தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

தேன்கனிக்கோட்டை, ஏப்.3: தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்பசந்திரம் கிராமத்தில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. தற்போது கோடையின் தாக்கத்தால் கிராமத்தில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவலறிந்த வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், பிடிஓவிடம் பேசி டேங்கர் லாரி மூலம் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து, சீராம குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Dhenkanikottai ,
× RELATED உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹92 ஆயிரம் பறிமுதல்