ஊட்டி,ஏப்.3: நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.2 கோடியே 26 லட்சத்து 75 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி தேதி தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்திடவும், பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநிேயாகம் செய்வதை தடுத்திடும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படை என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த மாாதம் 26ம் தேதியில் இருந்து ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டுச் சென்றவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நீலகரி மாவட்டத்தில் 197 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 26 லட்சத்து 75 ஆயிரத்து 110 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்களை காண்பித்த 162 பேருக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 9 ஆயிரத்து 830 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருப்பில் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 280 மட்டுமே உள்ளது. தற்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இது வரை அரசியல் கட்சியினரிடம் இருந்து எந்த ஒரு தொகையும் நீலகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்படவில்லை.