×

கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் பிரபாகரன் குறிச்சி பிள்ளையார்புரத்தில் வாக்கு சேகரிப்பு

கோவை, ஏப்.3:  கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் நேற்று காலை குறிச்சி உப்பிலித்திட்டு, வெங்கடாசலபதி நகர், பிள்ளையார்புரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:குறிச்சி பகுதியில் நகர்மன்ற தலைவராக இரண்டு முறை இருந்துள்ளேன். அப்போது செய்த நலத்திட்டங்களை காட்டிலும் எம்எல்ஏ ஆனால் அதிக அளவில் நலத்திட்டங்கள் செய்ய முடியும். திமுக ஆட்சி அமைந்ததும் கிணத்துக்கடவு தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும். 100 நாட்களில் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கோவை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகராஜ சோழன் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் சல்மான் கான், சலாம் பாட்ஷா, ராம்ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிகழ்வுகளில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, ஒன்றிய செயலாளர் ஈபி.ராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Kinathukadavu ,DMK ,Prabhakaran Kurichi ,Pillaiyarpuram ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி