×

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று 3வது கட்ட பயிற்சி

ஈரோடு, ஏப். 3: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று 3வது கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குசாவடி பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 3ம் கட்ட பயிற்சி முகாம் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. 2ம் கட்ட பயிற்சியில் மாவட்டம் முழுவதும் 9368 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

இதில் 4598 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். மீதமுள்ளவர்கள் தபால் ஓட்டுபோடுவதற்கான படிவங்களை பெற்றுச்சென்றனர். இந்நிலையில், இன்று 3ம் தேதி நடைபெற உள்ள 3ம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அந்தந்த பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தபால் ஓட்டு போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு