×

கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு

ஈரோடு, ஏப். 3: கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது புனித வெள்ளி வழிபாடாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வையும், அவர் சிலுவையில் உயிர் விட்ட நிகழ்வையும் நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்வார்கள். இதை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. நேற்று புனித வெள்ளி வழிபாடு கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Tags : Good Friday ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி