×

ஏரியில் முழ்கி சிறுவன் பலி போளூர் அருகே பரிதாபம்

போளூர், ஏப்.3: போளூர் அருகே ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(40), கூலி தொழிலாளி. இவரது மகன் நவீன்(12). 7ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று காலை சிறுவன் நவீன் தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றான்.தொடர்ந்து, ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தான்.

 இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சிறுவன் நவீன் பரிதாபமாக பலியானான்.தகவலறிந்த போளூர் போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Polur ,
× RELATED போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா