×

பேரணாம்பட்டு அருகே பிளாஸ்டிக் குப்பைகளால் சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு, ஏப்.3:பேரணாம்பட்டு அருகே பிளாஸ்டிக் குப்பைகளால் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு திரு.வி.க. நகர் அருகே உள்ள நீயாமத் வீதி 3ல் கால்வாயில் அடிக்கடி ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது.

கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளை பொதுமக்கள் கொட்டுகின்றனர். மேலும், வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் கால்வாய் கொட்டுகின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சாலையில் நடந்து செல்லும் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். தற்காலிகமாக வந்து சுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். எனவே, அப்குதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை மீட்டு கால்வாயை விரிவுபடுத்த வேண்டும். குப்பைகளை கால்வாயில் கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Peranampattu ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...