×

மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான 55 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

மயிலாடுதுறை, ஏப். 3:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பதற்றமான 55 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன்பிநாயர் கூறினார்.மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஸ்டாங்ரூம் மற்றும் வாக்குஎண்ணும் மையங்கள், மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை யின் பாதுகாப்புகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்பிநாயர், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்பிநாயர் கூறுகையில், அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மை, இங்க் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளது. இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு 2 கட்ட பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது.5ம் தேதி அவர்கள் பணியாற்றும் இடத்துக்கான ஆணைகள் வழங்கப்படும். தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags : Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...