×

ஜெயங்கொண்டம் பகுதி கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி கூட்டு திருப்பலி

ஜெயங்கொண்டம், ஏப்.3: ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில வட்டார முதன்மை குரு ரோச் அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ரோச்மாணிக்கம், தென்னூர் அன்னை லூர்து ஆலயத்தில் மார்க் மார்சலின் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.ஆண்டிமடம் மார்த்தினார் ஆலயத்தில் ஜான்பிரிட்டோ, பட்டணங்குரிச்சி லூர்து அன்னை ஆலயத்தில் அருள்சாமி, கூவத்தூர் அந்தோணியார் ஆலயத்தில் மரியதாஸ், கண்டியங்குப்பம் சலேத்மாதா ஆலயத்தில் ஜோமிக்ஸ் தலைமையில் திருப்பலி நடந்தது.

கெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் நிர்மல் ராஜ், நெட்டல குறிச்சி கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை டானியல் ஆகிய பங்குத் தந்தையர்கள் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. விழப்பள்ளம் செபஸ்தியார் ஆலயம் அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயம் வடவீக்கம் உபகாரஅன்னைஆலயம், குமிளங்குழி புனித சவேரியார் ஆலயம் ஆகிய ஆலய பங்குதந்தையர்கள் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், காலையிலும் சிறப்பு கூட்டு திருப்பலிகள் நடத்தபட்டது, ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Holy Friday ,Christian ,Jayangondam ,
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...