×

ஒருவர் கைது ஆன்லைன் கல்விக்காக மவுண்ட் சீயோன் பள்ளிகளுக்கு தேசிய அளவிலான விருது

புதுக்கோட்டை, ஏப். 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் மவுண்ட் சீயோன் பள்ளிகள் முழுமையான ஆன்லைன் கல்விக்காக தேசிய அளவில் சிறந்த பள்ளி விருதை பெற்றுள்ளது.இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கலிடம் மவுண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் விருதை பெற்று கொண்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயபிரதாவிடம் இருந்து மவுண்ட் சீயோன் பள்ளிகளின் நிர்வாக ஆலோசகர் செல்வராஜ் தாசன் கேடயத்தை பெற்று கொண்டார். இந்திய தூதர் ஜி20 மற்றும் ஜி7 சுரேஷ் பிரபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரத சுக்லா உடனிருந்தனர்.

Tags : Mount ,Zion ,Schools ,
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...