×

வீட்டை உடைத்து 6 சவரன் கொள்ளை

பூந்தமல்லி, ஏப்.3: மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 8வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43). பெயிண்டர். இவரது மனைவி தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சுரேஷும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, ₹25 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது.
புகாரின்படி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...