×

ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக பிரிசில்லா பாண்டியன் பிரசாரம்

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார். இவரை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் நேற்று காலை ஹாரிங்டன் சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து மாலையில் 107வது வார்டு மேற்கு பகுதியில் உள்ள வேம்புலியம்மன் குடியிருப்பு, வெங்கடாசலபதி தெருக்கள், அப்பாராவ் தோட்டம், அவ்வைபுரம், ஜோதிம்மாள் நகர், முத்தியப்பன் தெரு, அருணாச்சலம் தெருக்கள், ஓட்டல் சுப்பரப்பா  தேர்தல் பணிமனை ஆகிய பகுதிகளில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை  எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் இந்த தொகுயில் குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதிகள்  அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இந்த தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவதே லட்சியம். இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்தையும் ெதாகுதி மக்களுக்கு ஜான்பாண்டியன் பெற்றுதருவார் என்று வாக்குறுதி அளித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Priscilla Pandian ,John Pandian ,
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு