×

உத்திரமேரூர் புறவழிச்சாலையை விரைந்து செயல்படுத்துவேன்: அமமுக வேட்பாளர் பேச்சு

காஞ்சிபுரம், ஏப்.2: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையொட்டி வேடபாளையம், பட்டஞ்சேரி, நீரடி உள்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதீவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் பேசுகையில், உத்திரமேரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உத்திரமேரூர் புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். உத்திரமேரூரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவேன். உத்திரமேரூர் ஏரியை தூர்வாரி நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இந்தப் பிரசாரத்தின்போது, ஒன்றிய செயலாளர்கள்.தம்மனூர் தாஸ், வேளியூர் தனசேகரன், கூரம் பச்சையப்பன்,  உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலஞ்சேரி கமலக்கண்ணன், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் சந்தீப், உத்திரமேரூர் மேற்கு செயலாளர் பாபு, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், தேவராஜ், பேரூராட்சி செயலாளர் கார்த்திக், மாவட்ட மகளிரணி வரலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் மாதவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராதாகிருஷ்ணன், தேமுதிக.மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர்கள் காலூர் என்.எஸ் நந்தகுமார், விப்பேடு கிருபாகரன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுரங்கம், ராமலிங்கம், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர் கன்னியப்பன், நகர செயலாளர் சந்திரமௌலி , ஒன்றிய அவைத்தலைவர் உமாபதி , வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பழனிவேல்ராஜ்,  கிளை செயலாளர் பாபு, எஸ்டிபிஐ தமிமுன் அன்சாரி உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Uthiramerur ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...