×

தூத்துக்குடி தொகுதியில் அடிப்படைவசதியை மேம்படுத்துவேன் தமாகா வேட்பாளர் விஜயசீலன் உறுதி

தூத்துக்குடி, ஏப். 2: தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியனுடன் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது அவர் தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என உறுதியளித்தார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் தூத்துக்குடி- பாளை ரோட்டிலுள்ள காமராஜ் காய்கனி மார்க்கெட் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய அவர், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்’’ என்றார்.

 பிரசாரத்தில் வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், இளைஞர் அணி மத்திய பகுதி செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக நேற்று முன்தினம் மாலை தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி முத்தரையர் காலனி சங்க நிர்வாகிகளை முத்தரையர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் சந்தித்து ஆதரவு திரட்டினார். முத்தரையர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்ற, எஸ்.டி.ஆர். விஜயசீலன், தான் வெற்றி பெற்றதும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையம், தூண்டில் வளைவு அமைத்து தருவேன் என்றார். நிகழ்ச்சிகளில் அதிமுக இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் வீரபாகு,  வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் அமிர்தகணேசன், இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் தனராஜ், சிறுபான்மை அணி மாவட்டச் செயலாளர் பிரபாகர், வக்கீல் அணி மாவட்ட இணைச்செயலாளர் கோமதி மணிகண்டன், முன்னாள் நகராட்சி தலைவர் மனோஜ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் கோல்டன், ஆனந்தராஜ்,  பாஜ வக்கீல் அணி மாவட்டத் தலைவர் மகேந்திரன், தமாகா மாநகர தலைவர் ரவிக்குமார், ஆறுமுகநேரி நகரத் தலைவர் முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Tags : Tamaga ,Vijayaseelan ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி, முத்தையாபுரம்...