முசிறி, ஏப்.2: முசிறி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சென்டர் அமைக்கப்படும் என்ற திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் உறுதியளித்தார். முசிறி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முசிறி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் பேசும்போது, முசிறி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப் படும் . முசிறி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி புதிதாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். முசிறி தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும். கல்வி வளர்ச்சியிலும், சுகாதாரத்திலும் முசிறி தொகுதி மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் எனவே வரும் சட்டசபை தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சேகரன், மாநில நிர்வாகிகள் முருகேசன், ஆப்பிள் கணேசன், மயில்வாகனன், நகர செயலாளர்கள் சிவகுமார், தக்காளி தங்கராசு, சவுந்தரராஜன், நிர்வாகிகள் சிவா , நல்லுசாமி, வீர விஜயன், கலைச்செல்வன், பார்த்திபன், சுரேஷ்,நல்லேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.