×

ரங்கத்தில் நவீன பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை திமுக வேட்பாளர் பழனியாண்டி வாக்குறுதி

திருச்சி, ஏப். 2: ரங்கத்தில் நவீன பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளர் பழனியாண்டி பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். ரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி ரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ரங்கம் தொகுதிக்குட்பட்ட ரங்கம், நரியன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் பழனியாண்டி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடையே வேட்பாளர் பழனியாண்டி பேசுகையில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரங்கம் அடிமனை பிரச்னை தீர நடவடிக்கை எடுப்பேன். சாலை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன். நவீன பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதி அளித்தார். தொடர்ந்து திருவானைக்காவல் பிரம்மதீர்த்த நகரில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். ரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் மற்றும் திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Palaniyandi ,Aurangabad ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி