×

திருச்சியில் வெயிலுக்கு டீ மாஸ்டர் மயங்கி விழுந்து பலி

திருச்சி, ஏப். 2: திருச்சி உறையூர் சக்தி நகரை சேர்ந்தவர் பீர்முகமது. உறையூர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் பணியில் இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். தகவலறிந்த உறையூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து வெயில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்தாரா அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தாரா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும்.

Tags : Trichy ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!