×

கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலையில் இஸ்லாமியர் சமூகத்தினரிடம் கு.ப.கிருஷ்ணன் வாக்குசேகரிப்பு

திருச்சி, ஏப்.2: கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று முஸ்லிம் சகோதரர்களிடம் ரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்குசேகரித்தார். திருச்சி ரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள நூர்மஸ்ஜீத் பள்ளிவாசல் மற்றும் பெட்டவாய்த்தலையில் உள்ள ஜாமீஆமஸ்ஜீத் சுன்னத்வல்ஜமாத் பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு சென்று முஸ்லிம் சகோதரர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான முஸ்லிம் பிரேதங்கள் அடக்கம் செய்வதற்கு தனிஇடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்பின்னர் பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைசெய்யும் 500க்கும் மேற்பட்ட பெண்களிடம், வாக்குசேகரித்தார். மாலை திருவானைகோவில் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது தமிழகத்தில் புரட்சித்தலைவி விட்டுச்சென்ற பணியை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறார் என்றும், அதேபோல ரங்கம் தொகுதியில் ஜெயலலிதா காட்டியவழியில் தொடர்ந்து பணிசெய்திட தனக்கு ஒரு வாய்ப்புதரவேண்டும் எனகேட்டுக் கொண்டார். தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு கு.ப.கிருஷ்ணன் வாக்கு சேகரித்தார்.

Tags : KP Krishnan ,Kambarasampettai ,Pettavaittalai ,
× RELATED திருச்சி பெட்டவாய்த்தலையில்...