சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் அடையாறு எல்.பி.ரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது. திமுக பகுதி செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் துரை கபிலன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா, திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.
கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையாறு துரை, மதிமுக சார்பில் கழக குமார், பாக்கியம், ஏழுமலை, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரவிசங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பூவை முஸ்தபா, மமக சார்பில் முகமது யூசூப் மற்றும் சைதை அப்துல் கையூம், திமுக நிர்வாகிகள் மகேஷ்குமார், தனசேகரன், பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், குணசேகரன், பாலவாக்கம் விஸ்வநாதன், பொன்னுவேல், பாஸ்கரன், வாசுகி பாண்டியன், வே.ஆனந்தம், விநாயகமூர்த்தி, சாரதி, ரமேஷ், பாலசுந்தரம், பரிமேலழகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் திமுக வட்ட செயலாளர்கள் தமிழரசு பார்த்திபன், மதிவாணன், தாமோதரன், முருகவேல், பாலசதீஷ், பாரதிதாசன், தனசேகர், சந்தானம், ராஜி, பாண்டியன், ஜெயக்குமார், கணேஷ்குமார், ராஜா ரமணன் மற்றும் மைதிலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.