×

திருவில்லிபுத்தூரில் ரூ.98 ஆயிரம் பறிமுதல்

திருவில்லிபுத்தூர், ஏப்.2: திருவில்லிபுத்தூர் பகுதியில் மூன்று பிரிவுகளாக 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதுப்பட்டி விலக்கு அருகே உதவி பொறியாளர் தீபக்ராஜ், காவல் சார்பு ஆய்வாளர் தங்கமுடி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ராஜபாளையத்திலிருந்து திருவில்லிபுத்தூர் நோக்கி வந்த டூவீலரில் வந்த பாண்டியராஜ் என்பவரை வழிமறித்து விசாரித்தனர். பைனான்ஸில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் சோதனை செய்ததில், அவரிடம் இருந்த 98ஆயிரத்து 33ரூபாய்க்கு உரிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் கேட்டனர். அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை பிரிவினர் பணத்தை பறிமுதல் செய்து, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவானந்ததிடம் ஒப்படைத்தனர். பின்னர்பின்னர் பிடிபட்ட பணம் திருவில்லிபுத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...