×

பொள்ளாச்சி சம்பவத்தை நினைவில் வைத்து வாக்களியுங்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி பிரசாரம்

காரியாபட்டி, ஏப். 2:  காரியாபட்டி அருகே திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசை ஆதரித்து ஆவியூர், கீழ உப்பிலிகுண்டு, அரசகுளம், குரண்டி உள்ளிட்ட கிராமங்களில் திமுக தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்  திறந்த வேனில்  வீதி, வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பிரசாரத்தில் பேசியதாவது: தங்கம் தென்னரசுவை சென்ற முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள்.  இந்த முறை 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன். பெண்கள் பாதுகாப்பாக வாழவும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் உதவிதொகை வழங்குவதாக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தின் முதல்வராக வருவார். எனவே, பொள்ளாச்சி சம்பவத்தை நினைவில் வைத்து திமுகவுக்கு வாக்களியுங்கள் என பேசினார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் செல்லம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், மாவட்ட பிரதிநிதி சேது, ஊராட்சி தலைவர்கள் சிவசக்தி, மணிகண்டன், குருசாமி, ஆவியூர் கிளைச்செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pollachi ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!