×

ஆண்டிபட்டி அருகே கோஷ்டி மோதல்; 10 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி, ஏப். 2: ஆண்டிபட்டி அருகே, நடைபாதை பிரச்னையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துதமிழன் (30). இவரது வீடு அருகே இருப்பவர் ராஜபாண்டி. இந்நிலையில், பொது நடைபாதை தொடர்பாக முத்துதமிழன், ராஜபாண்டி குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று தகராறு ஏற்பட்டபோது, இரு தரப்பினரும் கற்கள், மரக்கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் முத்து தமிழன் அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி, ராஜபாண்டி, அய்யம்மாள், பொட்டியம்மாள், ரம்யா, முத்துலட்சுமி ஆகிய 6 பேர் மீதும், ராஜபாண்டியின் மனைவி முத்துசெல்வி அளித்த புகாரின் பேரில் முத்துதமிழன், முத்தையா, ஜெயபாண்டி, சுகன்யா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Andipatti ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி