×

சிட்கோ பிளாட் ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை

மதுரை, ஏப்.2:  சிட்கோ பிளாட் ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பாக்கியலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிற்சாலை அமைப்பதற்காக விதிகளை மீறி பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தடை விதித்து, முறையாக அறிவிப்பு வெளியிட்டு விதிகளை பின்பற்றி, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பிளாட்டுகள் ஒதுக்குமாறு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.   இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிளாட் ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மனுவிற்கு சிட்கோ மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்.

Tags : CIDCO ,
× RELATED கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி...