×

நத்தம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் விரிவுபடுத்த நடவடிக்கை அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் உறுதி

நத்தம், ஏப். 2: நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் நேற்று திருநூத்துபட்டி, திருகளத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரைக்கவுண்டன்பட்டி, போடிக்கம்பட்டி காலனி, மேட்டுப்பட்டி மற்றும் நத்தம் நகர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நத்தம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீடு தேடி வரும். கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். அத்துடன் குடும்ப கார்டுகளுக்கு வாஷிங்மெஷின், 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்பட பல நலத்திட்ட உதவிகளை பெற்றிட நீங்கள் எல்லாம் மறவாமல் வரும் 6ம் தேதி அன்று எனக்கு மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். இதில் நத்தம் ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சின்னு, மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், ஊராட்சி தலைவர் சவரிமுத்து, மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சார்லஸ், செல்வராஜ், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆரோக்கியசாமி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Natham Viswanathan ,Cauvery ,Natham ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...