×

கூடலூர் திமுக வேட்பாளர் காசிலிங்கம் பந்தலூர், கரியசோலையில் வாக்கு சேகரிப்பு

ஊட்டி, ஏப்.2:  கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரியசோலை மற்றும் விலங்கூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தாயகம் திரும்பிய மக்கள் அதிகம் உள்ளனர். இவர்களிடம் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, திமுக., வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரியசோலை, விலங்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அவர், ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: கரியசோலை மற்றும் விலங்கூர் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை திமுக ஆட்சி அமைந்ததும் நிவர்த்தி செய்யப்படும். சாலை வசதி, குடிநீர் மற்றும் தெரு விளக்கு போன்ற தீர்க்கப்படாத அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிைடக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கல்விக் கடன், வங்கி கடன், நகைக் கடன் உள்ளிட்டவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டேன் டீ தொழிலாளர்கள் ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இப்பிரசாரத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத்அலி, மேற்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நிர்வாகிகள் ஞானசேகர், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kudalur DMK ,Kasilingam Pandalur ,Kariyasola ,
× RELATED கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில்...