×

கூடலூரில் நூலக கழிவறையில் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

கூடலூர், ஏப்.2: கூடலூர் அடுத்த அதிகாரிவயல் பகுதியை சேர்ந்தவர் ஜன் (28). இவரது மனைவி பவானி (28). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதமாகிறது. கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பவானி, ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 30ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இவர், மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பள்ளியில் விசாரித்தபோது அவர் காலை 11 மணிக்கே புறப்பட்டு சென்றது தெரியவந்தது. பவானியின் செல்போன் எண்ணிக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. ஜன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பவானி கிடைக்கவில்லை. இந்நிலையில், கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள நூலகத்தில் பெண்கள் கழிவறையில் உள்புறம் பூட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர், தூக்கிட்டு தொங்குவதை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்று மாலை பார்த்துள்ளார். இது குறித்து அவர் நூலகரிடம் தகவல் தெரிவித்தார். கூடலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்ததில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு காணாமல் போய் தேடப்பட்டு வந்த பவானி என்பது தெரியவந்தது. இது குறித்து கூடலூர் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Cuddalore ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!