×

கிருஷ்ணராயபுரத்தை வளர்ச்சி அடைந்த தொகுதியாக மாற்றுவேன் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி பிரசாரம்

கரூர், ஏப்.2: கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி நேற்று தொகுதிக்குட்பட்ட விடுபட்ட பகுதியில் விர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த 2 வாரமாக பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று மதியம் பழைய ஜெயங்கொண்டம் சந்தை, சுவாதி நிறுவனத்துக்கு உட்பட்ட பகுதி, ஏமூர் கொங்கு நகர், மேலடை பகுதிகளில் திறந்த வேனில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியதாவது: கிருஷ்ணராயபுரம் தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்ற தேவையான அனைத்து பணிகளையும் நான் சிறப்பாக மேற்கொள்வேன். தொலைநோக்கு பார்வையோடு திமுக தலைவர் 7 உறுதிமொழிகள் அறிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு நகரப் பேரூந்துகளில இவலச பயணம், சிலிண்டர் வாங்க மான்யம், நகைக்கடன் தள்ளுபடி, படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பன போன்ற பல்வேறு திட்டங்களையும் அதில் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து திட்டங்களுக்கும் இந்த தொகுதி மக்களுக்கு தடையின்றி கிடைத்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். பிரசார நிகழ்வின்போது, அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளருடன் உடன் சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Sivakamasundari ,Krishnarayanapuram ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்