×

குளித்தலை அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் 8 பேர் மீது வழக்குப் பதிவு

குளித்தலை, ஏப்.2: குளித்தலை அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.குளித்தலை அடுத்த தோகைமலை பொருந்தலூர் கிராமம் கல்வட நாயகன் பட்டியைச் சேர்ந்தவர் அப்பா நாயக்கர் (49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள். இதில் 16 வயதுடைய தனது மூத்த மகளை காணவில்லை என கடந்த 17.6.2020 அன்று தோகைமலை போலீசில் புகார் செய்தார். ஆனால் காணாமல் போன பெண் தானாக வந்து தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்று கூறியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 17.8.2020 அன்று பொருந்தலூருக்கு பைக்கிள் வந்த ரங்கசாமி என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளதாக கூறி அதற்கான போட்டோவை இளம்பெண்ணின் தாயிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது.

இதைபார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டதால் அவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, பெண்ணிற்கு அவர்களின் சமுதாய முறைப்படி கட்டாய திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது, புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து திருமணம் செய்த ரங்கசாமி உட்பட பெற்றோர் மற்றும் உறவினர்களான சின்னசாமி, ரெங்கா நாயக்கர், கண்ணம்மாள், செவத்த மணி, ராமர், பழனிச்சாமி, தொப்பநாய்க்கர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...