×

அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் உறுதி நாளை நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வேட்பாளர்களுக்கு அழைப்பு செலவின ஆவணங்களுடன் பங்கேற்க அறிவுறுத்தல்

கரூர், ஏப். 2: கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்தம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் செலவிடப்படும் தேர்தல் தொடர்பான செலவின கணக்குகள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் பியூஸ்பாட்டியா, தீபக்குமார் ஆகியோர்களால் 30ம்தேதி அன்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வுக் கூட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் 35 வேட்பாளர்களும், கரூர் தொகுதியில் 69 வேட்பாளர்களும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 15 வேட்பாளர்களும், குளித்தலை தொகுதியில் 17 வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு தொடர்பான பதிவேடுகள், ரசீதுகள், வங்கி புத்தகம் மற்றும் உரிய அனைத்து அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்துவது தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்களின் கடமையாகும்.ஏப்ரல் 3ம்தேதி (நாளை) தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் கடைசி ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து வேட்பாளர்களும், தேர்தல் செலவின முகவர்களும் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Vijayabaskar ,
× RELATED பாஜவை கழற்றிவிட்டு அதிமுக கூட்டணி...