×

திமுக ஆட்சியமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்

சீர்காழி, ஏப். 2: சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், பழையபாளையம், அகரவட்டாரம், தாண்டவன்குளம், மடவாமேடு, கோபாலசமுத்திரம், தைக்கால் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவருக்கு பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். பின்னர் வேட்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில் ஏழை விவசாயிகள் மின்மோட்டார் வாங்க திமுக தேர்தல் அறிக்கையில் ரூ.10,000 வரை மானியமாக வழங்கப்படுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனால் திமுக ஆட்சிக்கு வர அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இராம இளங்கோவன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி, திருமாவளவன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ராஜ்குமார் பங்கேற்றனர்.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்