×

நாகையில் இருந்து சென்னைக்கு அரவை பணிக்காக 1,000 டன் நெல் மூட்டைகள் அனுப்பி வைப்பு

நாகை, ஏப். 2: நாகையில் இருந்து அரவைக்காக 21 வேகன்களில் 1,000 டன் நெல் மூட்டைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நாகை பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதன்படி நேற்று நாகை பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட சன்னரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நாகை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரிகளில் இருந்து 21 வேகன்களில் 1,000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயில் ஏற்றப்பட்டு சென்னை ராயபுரத்துக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Naga ,Chennai ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா