×

மயிலாடுதுறை பகுதியில் 5,000 ஏக்கரில் முற்பட்ட குறுவை சாகுபடி மும்முரம்

மயிலாடுதுறை, ஏப். 2: மயிலாடுதுறை பகுதியில் 5,000 ஏக்கரில் முற்பட்ட குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடி நீரை கொண்டு 1.30 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறுவை மற்றும் சம்பா அறுவடை ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முற்பட்ட குறுவை சாகுபடி நடந்து வருகிறது. குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை பகுதியில் நாற்றங்கால் அமைக்கும் பணியும், வயல்களை சீர்திருத்தும் பணியிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Mayiladuthurai ,Kuruai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...