×

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை கூடுதல் பணிக்கு கட்டாயப்படுத்தகூடாது அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி, ஏப். 2: பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க வட்டார பொதுக்குழு கூட்டம் நடந்தது. சகுந்தலா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பச்சையம்மாள், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரா தனலட்சுமி ஆகியோர் பேசினர். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொருளாளர் தேவமணி நிறைவுரையாற்றினார்.

கூட்டத்தில் சங்க பொது செயலாளர் டெய்சிக்கு வழங்கப்பட்டுள்ள மெமோவை நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். அதுவரை போஷான் அபியான் பணிகளை பார்ப்பதில்லை. அங்கன்வாடி பணியாளர்களை தேர்தல் முடியும் வரை கூடுதல் பணிகளை பார்க்க கட்டாயப்படுத்தக்கூடாது. தேர்தல் முடிந்தவுடன் பணியில் இருந்து அனைத்து பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.


Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு