×

ஜி.கே.வாசன் பிரசாரம் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் நகராட்சி ஆணையரை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் முற்றுகை

திருத்துறைப்பூண்டி, ஏப்.2: திருத்துறைப்பூண்டியில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் நகராட்சி ஆணையரை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர்(பொ)செங்குட்டுவன் அதிமுக அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து தேர்தல் விதிமுறை மீறி செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியே தவறு செய்து வருகிறார்.இந்த பதவியில் இவர் தொடர்ந்து நீடித்தால் சட்டமன்ற தேர்தலில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் உள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நகராட்சி ஆணையர் அறையில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் திமுக நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூ., நகர செயலாளர் ரகுராமன், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், மதிமுக நகர பொறுப்பாளர் மோகன் மற்றும் கூட்டணி கட்சியினர் திடீரென சிறிது நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது பற்றி தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : GK Vasan ,Municipal Commissioner ,AIADMK government ,
× RELATED தூத்துக்குடி தமாகா வேட்பாளர் நாளை...