×

பல்வேறு கிராமங்களில் கே.பி.முனுசாமி தீவிர பிரசாரம்

கிருஷ்ணகிரி, ஏப்.2: வேப்பனஹள்ளி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி, நேற்று சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் திறந்து வேனில் சென்றும், நடந்து சென்றும் ஆதரவு திரட்டினார். அப்போது மாதரசனப்பள்ளி மற்றும் உலகம் கிராமங்களில் அவர் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியை பின்பற்றி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை செய்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் தான் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி கிராமத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி கடடிடம் உதாரணம் ஆகும். வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மேலும், அரசு கலைக்கல்லூரிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம், 20 அம்மா மினி கிளினிக் ஆகியவை துவங்கப்பட்டுள்ளது. ₹325 கோடி மதிப்பில் எண்ணேகொள்புதூர் கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையின் அனைத்து மதகுகளும் மாற்றப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசு தொடர, அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கே.பி.முனுசாமி எம்.பி.பேசினார். பிரசாரத்தின் போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : KP Munuswamy ,
× RELATED தமிழ்நாட்ல பாஜ தவழும் குழந்தை: கே.பி.முனுசாமி ‘பங்கம்’