×

ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை

பென்னாகரம், ஏப்.2: பென்னாகரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ, நேற்று பல்வேறு கிராமங்களில் வாக்குகளை சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக வேட்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ பேசுகையில், ‘பென்னாகரத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை பாதுகாப்பேன்.

பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் சிட்கோ தொழிற்பேட்டை துவங்குவதற்கு நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் தரமான தார்சாலைகள் அமைக்கப்படும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.அப்போது, ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், ஜீவானந்தம், சக்திவேல், நகர செயலாளர் வீரமணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவன், நகர செயலாளர் வீரமணி, காங்கிரஸ் நிர்வாகி பெருமாள் கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா