×

திருவண்ணாமலை ெதாகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர் கலெக்டர், எஸ்பி நேரில் ஆய்வு

திருவண்ணாமலை, ஏப்.2: திருவண்ணாமலை ெதாகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்குகள் செலுத்தியதை, கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் பார்வையிட்டனர்.திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர், தபால் வாக்குகளை அளிப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.அதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினருக்கு ஏற்கனவே தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை முறையாக பூர்த்தி செய்து, அரசிதழ் பெற்ற அலுவலரின் கையெழுத்துடன் தபால் வாக்குகளை செலுத்த சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 543 போலீசார் மற்றும் 122 ஊர்காவல் படையினர் நேற்று தபால் வாக்குகளை செலுத்தினர். இந்த பணியை, கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த் மற்றும் தேர்தல் பாதுகாப்பு மேற்பார்வையாளர் அஜய்குமார் சவுத்ரி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.மேலும், தபால் வாக்குகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. அதில், திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடந்தும் அலுவலர் வெற்றிவேல் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

Tags : Thiruvannamalai ,Collector ,, ,SP ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...