×

ரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி தீவிர வாக்குசேகரிப்பு

திருச்சி, ஏப். 1: ரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ரங்கம் தொகுக்குட்பட்ட எரங்குடி, கும்பக்குறிச்சி, பாத்திமாநகர், சேதுராப்பட்டி, குச்சிலியம்பட்டி, மேலப்புடையான்பட்டி, சூறாவளிப்பட்டி, பள்ளப்பட்டி, யாகப்புடையான்பட்டி, கவுந்தநாயக்கன்பட்டி, செட்டியூரணப்பட்டி, மேக்குடி, மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளர் பழனியாண்டி பேசுகையில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எனவே திமுக அமைந்தவுடன் இப்பகுதி விவசாயிகள் வாழ்வில் வளம் பெற அனைத்து நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதி அளித்தார். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Aurangabad ,Assembly ,DMK ,Palaniyandi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு