×

சிறப்பு அலுவலர் ஆய்வு ஆதிதிராவிட மக்களின் தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும்

திருவாரூர், ஏப்.1: நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நேற்று தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் கீழவிடையல், மேலவிடையல், சித்தன்வாழூர், கண்டியூர், தொழுதூர், பாடகச்சேரி, விருப்பாட்சிபுரம், ஆதிச்சமங்கலம் மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் லாயம், வளையமாபுரம், கடைத்தெரு, அக்ரஹாரம், கள்ளர் தெரு, கோவில்பத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
கீழவிடையல் எனும் இடத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தபோது அங்கிருந்த பெண்களும், சிறுவர்களும் அமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். கீழவிடையலில் ஒரு பெண் குழந்தைக்கு ஜெயசக்தி என்றும், மேலவிடையலில் ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயசேகரன் என்றும் பெயர் வைத்தார். அப்போது, அதிமுக மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் ஆதிதிராவிட மக்கள் வாங்கிய தாட்கோ கடன் தள்ளுபடி செய்யப்படும்.

பழுதடைந்துள்ள பழைய தொகுப்பு வீடுகள் அகற்றப்பட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்படும். தாழ்த்தப்பட்டவர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்ட நிதி ஆணையம் உருவாக்கப்பட்டு அனைத்து உதவிகளும் உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிப்பின்போது அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Adithravita ,
× RELATED ஆதிதிராவிட மகளிருக்கு அதிக...