தஞ்சை, ஏப். 1: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பதிவாளர் அலுவலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள ஆலமரங்கள் கஜா புயலின்போது சாய்ந்தது. இதுவரை அந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாததால் பதிவாளர் அலுவலக வளாகமே காடுபோல் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணாடி விரியன் பாம்பு பதிவாளளர் அலுவலகத்துக்கு புகுந்தது. இதை பார்த்த மக்கள், ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்து பாம்பை அடித்து கொன்றனர்.