×

பெரம்பலூர் நகராட்சி தரம் உயர்த்தப்படும் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் உறுதி

பெரம்பலூர், ஏப்.1: பெரம்பலூர் நகராட்சி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முன் மாதிரி நகராட்சியாக மாற்றியமைக்கப்படும் என பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் உறுதி அளித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இளம்பை தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆத் தூர் சாலை, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ரோவர்ஆர்ச், 100அடி சாலை உள்ளிட்டபகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார். அவருக்குப் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் வாக் காளர்களிடம் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளையும் பெற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தமிழக அளவில் எந்த மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை யிலும் இல்லாதபடி 20க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. தொடர்ந்து அதிமுக ஆட்சிஅமைந்தால் பெரம்ப லூர் நகராட்சி முதல்நிலை நகராட்சியாகத் தரம்உயர்த்தப்பட்டு முன்மாதிரி நகரா ட்சியாக மாற்றியமைக்கப்படும் என்றார். பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, முன்னாள் எம்பி சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், முன்னாள் நகராட்சித் தலைவர் ரமேஸ், நகர மகளிரணிச் செயலாளர் தனலெட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் கவுன்சி லர் வடிவேலு, பாஸ்கரன், புரட்சிதாசன் உள்ளிட்ட அதி முக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : AIADMK ,Tamilselvan ,Perambalur ,
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை