காங்கயம், ஏப். 1: காங்கயம் அருகே, உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.89 லட்சம் மற்றும் 260 ஜீன்ஸ் பேண்ட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.காங்கயம் அருகே உள்ள படியாண்டிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே காரில் வந்த கார்த்திக் என்பவர் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல், ரூ.1,89 லட்சத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் சார் நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.காங்கயம் அருகே, பழையகோட்டை சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையின் மற்றொரு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முறையான ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வரப்பட்ட 260 ஜீன்ஸ் பேண்ட்களை பறிமுதல் செய்து, காங்கயம் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.