×

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் கிராமப்புற சாலைகள் சீரமைக்கப்படும் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்குறுதி

சீர்காழி, ஏப். 1: சீர்காழி அருகே அத்தியூர், அகணி, நிம்மேலி, மருதங்குடி, வள்ளுவக்குடி, கொண்டல், புங்கனூர், கற்கோயில் ஆகிய பகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வெடிவெடித்து சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.

முன்னாள் எம்எல்ஏ அருள்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் இராம இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட துணை அமைப்பாளர் ஜூபையர் அஹமது, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவ ட்ட செயலாளர் சீனிவாசன், விசிக முன்னாள் மாவ ட்ட செயலாளர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்லப்பன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Panneer Selvam ,Sirkazhi assembly ,
× RELATED மோடியை போலவே அண்ணாமலை ஒரு சர்வாதிகாரி...