×

துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தல் கீரனூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

மயிலாடுதுறை, ஏப். 1: மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அடுத்த திருவாரூர் கீரனூரில் பழமையான செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளன. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், எல்லை தேர்பவனி, தேர் திருவிழா, தீமிதி விழா நடைபெறும். இந்தாண்டு கோயில் விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.

இந்நிலையில் நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் நூதன முறையில் தலையில் தேரை தூக்கி கொண்டு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஊர் எல்லையான வயல் பகுதியை சுற்றி வந்து மீண்டும் கோயிலை அடைந்தனர். விவசாயம் செழிக்க வேண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags : Deputy Governor ,Keeranur ,Celliyamman Temple Therottam ,
× RELATED புதுச்சேரி நிர்வாகம் சீர்குலைய துணை...