×

தயார் நிலையில் வாக்குப்பதிவுக்கான பொருட்கள் நாகை, மயிலாடுதுறையில் 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

நாகை, ஏப். 1: சட்டமன்ற தேர்தலையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது. நாகை கலெக்டர் பிரவீன்பிநாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடை இயங்காது.

அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அத்துடன் செயல்படும் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்படும். மேலும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான கூடங்களும் மூடப்படும். இந்த நாட்களில் முறைகேடாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tasmac ,Naga ,Mayiladuthurai ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை