×

பெருந்துறையை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

ஈரோடு, ஏப். 1:  பெருந்துறை தொகுதியை வளர்ச்சி திட்டங்களில் மாநிலத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று பெருந்துறை சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்டாச்சலம் உறுதியளித்துள்ளார்.  பெருந்துறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்  தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்டு நேற்று ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளான செங்கபள்ளி, கஸ்தூரிபாளையம் , ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், எஸ். பெரியபாளையம், ஏ.பெரியபாளையம் , ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகிளல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர்களின் தொகுதிகளில்கூட வாக்குகள் குறைவாக பெற்றார்கள். ஆனால் நான் அதிகப்படியான வாக்குகளை அதிமுகவிற்கு பெற்று கொடுத்தேன். முதல்வர் கூட என்னை அழைத்து பாராட்டினார்.

ஆனாலும் கூட, என்னுடைய உழைப்பிற்கு மரியாதை இல்லாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்கள் பணியை தவிர எனக்கு வேறு எந்த பணிகளும் கிடையாது. தொகுதிக்கு நன்றாக உழைத்தால் வாய்ப்புகள் தானாக தேடி வரும் என்று எண்ணி இருந்த என்னை திட்டம் போட்டு ஏமாற்றி விட்டார்கள். எனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் உழைக்கின்ற தொண்டன் எவருக்கும் ஏற்படக்கூடாது. தற்பொழுது நான் கட்சி சார்பாக போட்டியிடவில்லை. மக்களின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தாழ்த்தபட்ட மக்கள் வசிக்கின்ற பகுதியிலும், இதர சமூகத்தை சார்ந்தவர்களும் சிறப்பான வரவேற்பை கொடுத்து எனக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். நான் அனைத்து சமூக மக்களோடு தான் கூட்டணி வைத்துள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்போது, பெருந்துறை தொகுதியை வளர்ச்சி பணிகளில் மாநிலத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன். இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் பேசினார்.

Tags : Perundurai ,
× RELATED பட்டதாரிகளுக்கு வாய்ப்பு 4,889 கிலோ அரிசி மூட்டைகள் பறிமுதல்