×

பெருந்துறை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர் சூறாவளி பிரசாரம்

பெருந்துறை, ஏப். 1:    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஜே.கே (எ) ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கும், தொகுதி சார்ந்த பகுதி மக்களுக்கும் ஆற்றிய நலப்பணி திட்டங்களை எடுத்து கூறி தொடந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நேற்று காலை பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளான ஜீவா கர், சென்னியவலசு, தோப்புபாளையம், பணிக்கம்பாளையம், பெரிய வேட்டுவபாளையம், முத்து நகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வேட்பாளர் ஜெயக்குமார் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கையில் இரட்டை இலை சின்னத்தை கைகளில் ஏந்தியவாறு அதிமுகவுக்கு ஆதரவாகவும், வேட்பாளர் ஜெயக்குமாருக்கு வாக்களிக்கும்படி பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை துவங்கிய இந்த இருசக்கர வாகன பிரசார பேரணியானது, பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வழியாக மாலை வரை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். இப்பிரசார கூட்டத்தில் பேரூர் கழக செயலாளர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் விஜயன், முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, வேளான் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் விஜயன், யூனியன் சேர்மன் சாந்தி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : AIADMK ,Perundurai municipality ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...