×

வீடு, வீடாகச் சென்று சாத்தூர் ராமச்சந்திரன் தீவிர வாக்குசேகரிப்பு

அருப்புக்கோட்டை, ஏப். 1: அருப்புக்கோட்டை நகர் புளியம்பட்டி, திருநகரம் பகுதியில் 29 தெருக்களில் உள்ள பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: திருநகரம் பகுதி விசைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியாகும். கடந்த 5 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்கள் அதிகாரிகள் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்கும், தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்கும், சாயத்தொழிற்சாலைகளைை அதிகாரிகள் மூட வருகிற நேரத்தில் நெசவாளர்களின் சூழ்நிலையை கூறி பிரச்சனைக்கு தீர்வு கண்டேன். இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஒரு துரும்பைக்கூட கிள்ளிபோட்டதில்லை. கொரோனா காலத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில் லாரிமூலம் குடிநீர் விநியோகம் செய்தேன். அருப்புக்கோட்டை தொகுதி மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறினார்.

முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், நகர திமுக செயலாளர் மணி, மாநில நெசவாளர் அணிசெயலாளர் பழனிச்சாமி, முன்னாள் நகர் மன்ற துணைதலைவர் தமிழ்காந்தன், திமுக பிரமுகர் சிவசங்கரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சோலையப்பன், நகரதுணை செயலாளர்கள் ஆசைத்தம்பி, கார்த்திகேயன், பொருளாளர் பெரியசாமி, தலைவர் ராமசாமிபுரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sathur Ramachandran ,
× RELATED விருதுநகர் மேல்நிலை பள்ளியில் ரூ.2.14...