×

திருவில்லிபுத்தூர் பஸ்களில் பறக்கும்படை சோதனை

திருவில்லிபுத்தூர், ஏப்.1: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும் படைகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டூவீலர், லாரி, ெடம்போ வாகனங்களை அவர்கள் அதிக அளவு சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பஸ்களில் பணம் கடத்துவதாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. அதனால் பஸ்களை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதையடுத்து திருவில்லிபுத்தூர் பஸ்நிலையத்தில் பறக்கும் படையினர் நேற்று அனைத்து பஸ்களிலும் ஏறி சோதனை நடத்தினர்.
பயணிகளிடம் இருந்த பொருட்கள், பைகளை வாங்கி அவர்கள் சோதனையிட்டனர். துணை வட்டாட்சியர் முத்துமாரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையால் திருவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Srivilliputhur ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...